என் மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கனகாவின் தந்தை புகார்!!

637

Kanaka-and-her-father

நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும் கருத்துமாக நான் வளர்த்து வந்தேன்.

இடையில் என்னென்னவோ ஆகிவிட்டது. இந்தநிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள்.
நான் அவளை பைத்திரியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனு குறித்து பொலிசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.