பிணங்களை சாப்பிடும் வாலிபரை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்..!!

675

psychoஇந்திய உத்திரபிரதேசத்தில் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்தனர்.

உத்திரபிரதேசத்தின் கான்பூர் சகேரி பகுதியில் உள்ள மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குந்தன் என்ற 25 வயது இளைஞர் சுற்றி திரிந்துள்ளார்.

இவர் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிடுவதாக சந்தேகமடைந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான குந்தனை விரைந்து வந்த பொலிசார் அழைத்து சென்றனர்.

இதன் பின்பு குந்தனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.