இணையத்தை கலக்கும் சூர்யா பாடிய முதல் பாடல் (வீடியோ இணைப்பு)..!

650

suryaநடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் முழு உலகையுமே ஒரு புரட்டு புரட்டி எடுத்தது. அதன்பின்னர் அண்மையில் சிவகர்த்திகேயன் பாடும் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வரிசையில் தற்பொழுது சூர்யாவும் இணைந்துள்ளார்.

“கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே..” எனத் தொடங்கும் இந்தப் பாடலை அவர் பாடும் வேளையில் பாடகர் கார்த்திக், பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டோர் அருகில் இருப்பதைக் காணலாம்.