தந்தையுடன் செல்லவே விருப்பம் – சேரனின் பாசப்போராட்டம் வென்றது..!

308

seranதிரைப்பட இயக்குனர் சேரன் தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுள்ளார். இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சேரன் பொலிசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே சந்துருவின் தாய் உயர்நீமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்தார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாமினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் சேரன் மகள் தாமினி தனக்கு காதலன் வேண்டாம் என்றும் தான் தந்தையுடன் செல்லவே விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது மகளுடன் நடந்த பாசப்போராட்டத்தில் வென்றுவிட்டு விட்ட மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் சேரன்.