தொடர்கிறது தலைவா சர்ச்சை – மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

345

thalaivaநடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாலும், வெடிகுண்டு வைக்கப்படும் என தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாலும் திரைப்பட உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்தனர்.

இந்நிலையில் பல்வேறு முயற்சியின் காரணமாக, “தலைவா´ திரைப்படம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் அந்த திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் “தலைவா´ திரைப்படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இது குறித்து அந்த திரையரங்கு மேலாளர் ஜெயக்குமார், கீழ்ப்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.