வட்ஸ் அப்பால் நேர்ந்த விபரீதம்!!

316

Whatsapp

பாகிஸ்தானில் இஸ்லாமியத்தை அவமதித்த வழக்கில், அந்நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவரை தீவரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாசிர் பஷீர் என்ற நபர் பொலிசில் அளித்துள்ள புகாரில், நதீம் ஜேம்ஸ் என்னும் தனது கிறிஸ்துவ நண்பன் வட்ஸ் அப்பில் ஒரு கவிதை அனுப்பியதாகவும், அது, நபி முகம்மது உட்பட மற்ற புனித நபர்களை இழிபடுத்தும் வகையில் இருந்தாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார், நதீம் ஜேம்ஸ் மீது மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது சம்பவம் அறிந்து தலைமறைவாகியுள்ள ஜேம்சை பொலிசார் தீவரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஜேம்ஸின் உறவினர்கள் சிலரை பாதுகாப்பு காவலில் வைத்துள்ளதாகவும், நகரத்தில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்களால், நாட்டில் அடி தடி மற்றும் வன்முறைகள் ஏற்படடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இது போன்று மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.