பூமியை நோக்கி வரும் சூரியப் புயலால் பூமிக்கு ஆபத்தா?

374

solar_storm_001

சூரியனில் இருந்து நேற்று அதிகாலை வெளிப்பட்ட சூரியப் புயல் பூமியை நோக்கி வருவதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும், முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
இதன்படி நேற்று சூரியனில் இருந்து அதிக வாய்ந்த வெப்பம் வெளிப்பட்டு, வினாடிக்கு 570 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது. இது பூமியை வந்தடைவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும் என்றும், இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா அறிவித்துள்ளது.

ஆனால் உலக நாடுகள் விண்வெளியில் அதிகளவிலான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன. இச்செயற்கைக்கோள்கள் மூலம் தான் தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

பூமியில் இருந்து வெளிவரும் சூரியப்புயலால் செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.