கடவுச் சீட்டுகளுக்கு கைவிரல் அடையாள முறை அறிமுகம்!!

889

finger

கடவுச்சீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடவுச் சீட்டுக்காக கைவிரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பல நாடுகளில் கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவுச்சீட்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 679.7 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய முறை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 629.7 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூ டாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.