ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் : ஐநாவில் இலங்கை!!

737

un

அடக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்iளிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது தம்மை சந்தித்த சிலர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பழிவாங்கப்படுவதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த துல்லியமான தரவுகள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து சரியான தகவல்களை வெளியிடுமாறு கோருவதாக ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.