அழகி போட்டியில் இருந்து கர்ப்பிணி நீக்கம் : நீச்சல் உடை காட்டிக் கொடுத்தது!!

344

mis

பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.

இந்தஅழகிப் போட்டியில் மணிலாவைச் சேர்ந்த மிஸ் முத்யா ததுல் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மிஸ் குரகாவோ நீச்சல் உடைப் போட்டியின் போதுதான் கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

காரணம் அவரது வயிறு பெரிதாக காணப்பட்டது. தாய்மையை மறைக்க முடியாதே. இதையடுத்து நடுவர்கள் அவருக்கு கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர். சோதனையில் அவர் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் தான் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே மிஸ் குரகாவோவுக்கு தெரிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்பதுதான் அவருக்கு வருத்தமாக போய் விட்டதாம்.

போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் அவர் போட்டி முழுவதும் கூடவே இருந்து சக போட்டியாளர்களை ஊக்குவிக்க அனுமதி தந்தனர் போட்டி அமைப்பாளர்கள். அவரும் உற்சாகத்துடன் சக போட்டியாளர்களை ஊக்குவித்தார்.

இந்தப் போட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அழகி முத்யா ததுல் பட்டம் வென்றார். இப்பட்டம் வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான்.
கரீபியக் கடலில், நெதர்லாந்துக்கு அருகில் உள்ள குட்டித் தீவுதான் குரகாவோ. இங்கு மொத்தமே ஒன்றரை இலட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். நெதர்லாந்து நாட்டுக்குக் கட்டப்பட்டது இந்தத் தீவு.