முஸ்லீம் மாணவிகள் நீச்சல் பயிற்சி : நீதிமன்றம் தீர்ப்பு!!

332

mus

மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.

ஜெர்மன் நகரான பிராங்க்போட் இல் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள் தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது.

சில முஸ்லீம் மாணவிகள் புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள்.

ஆனால் நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவர்களுடன் மாணவிகள் நெருக்கமான நிலையில் நீச்சல் பயிற்சி பெறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சில பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

மதக் காரணங்களுக்காக பள்ளிக்கூட நிகழ்வுகளில் இருந்து ஒரு மாணவர் விலக்களிக்கப்பட முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் சில கத்தோலிக்கப் பகுதிகளில் உடற்பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே ஆண் – பெண் பிரிவினை நிலவுகிறது என்றும், சில மதச்சார்பற்ற உடற்பயிற்சி நிலையங்களில் கூட பெண்கள் மட்டுமே பயிற்சி பெறும் பகுதிகள் இருக்கின்றன என்றும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.