9 நாட்கள் 9 ஆண்கள்: சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

434



உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை 9 நாட்கள் 9 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டோலி என்ற கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இவரது கணவர் இறந்துவிட்ட காரணத்தால் தனது 2 குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது Fayaz என்பவர், டிராப் செய்வதாக சாந்தியிடம் கூறி அவரை தனது வண்டியில் அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார்.வீட்டின் வாசலில் இறங்கிய சாந்தி, மாடிப்படி ஏறி தனது வீட்டுக்கு செல்கையில், அவரை பின்தொடர்ந்த Fayaz, சாந்தியை உள்ளே தள்ளி கதவை தாழ்ப்பாளிட்டுள்ளார்.



அதன்பின்னர் சாந்தியை பலாத்காரம் செய்து , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற அன்று சாந்தியின் குழந்தைகள் அவரது அண்ணன் வீட்டில் இருந்துள்ளனர்.இதற்கு அடுத்த நாள் நடுஇரவு 1 மணியளவில், இரண்டு நபர்கள் சாந்தியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவரது முகத்தில் போதை மருந்து கலக்கப்பட்ட கேக்கினை தடவியதில், அவர் சுயநினைவை இழந்துள்ளார்.அதன்பின்னர் சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் . பிப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் 6 ஆம் திகதி வரை ஒவ்வொருவராக சாந்தியின் வீட்டிற்கு வந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.



அவர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும், கையில் ஏதேனும் ஒரு ஆயுதத்துடன் வருவதால் சாந்தியால் தப்பிக்க முடியவில்லை.இந்நிலையில், மார்ச் 6 ஆம் திகதி எப்படியாவது இவர்களை காட்டிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த அவர், அன்றைய நாளில் 2 நபர்கள் வரும்போது, அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.



மேலும், அந்த 9 நபர்கள் மீதும் பொலிசில் புகார் அளித்தள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் Fayaz Mysorewale (23), Haroon Sarkavas (22), Sadiq Khan (25), Alif Syed (22), Jameel Desai( 26), Illiyas Ankolekar (22), Nasrollah Khan (23), Sadiq Bagewadi மற்றும் Niyaz ஆகியோர் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.