வவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை அறிமுகம்!!

354


manjalவவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியளித்துள்ளது.
இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.



இப்பயிர் செய்கை பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி முதலான இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவியும் நாடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.