வவுனியாவில் இடம்பெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வு!!(படங்கள்)

607

வவுனியாவில் காந்தி ஜெயந்தி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது இதில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து காந்தி ஜெயந்தி நிகழ்வை வவுனியா நகர மண்டபத்தில் அனுஸ்டித்தன.

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவரின் ஏற்பாட்டில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நகரசபை செயலாளர் சத்தியசீலன் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை கணக்காளர் உட்பட ஊழியர்களும் வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகளான செயலாளர் ரோய் ஜெயக்குமார், மாணிக்கம் ஜெகன், சிவபாலன், கிறிஸ்டோபர், ஞானபிரகாசம், அமுதன், சிவம், வசந்தன் ராஜ், மோகன் சர்மா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முதலில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நகரசபை செயலாளர், தமிழ்மணி அகளங்கன், ரோய் ஜெயக்குமார், சிவபாலன் ஆகியோர் மாலை அணிவித்தும், ஏனையோர் பூப்போட்டும் வணக்கம் செலுத்தியனர்.

பின்னர் தமிழ் மணி அகளங்கன் அவர்கள் மகாத்மா காந்தியை பற்றி நினைவு உரையாற்றினார். நகரசபை செயாளரும் சிறப்பு உரையாற்றினார். வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமாரின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

1 2 3 4 5 7 8