வவுனியாவை வந்தடைந்தது பொதுநலவாய வாகனத் தொடரணி!!(படங்கள்)

337

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வரவேற்கும் நோக்கில் எம்.ரி.வி ஊடக வலையமைப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் ஊடக அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வாகனத் தொடரணி இரண்டாம் நாளான இன்று வவுனியா நகரை வந்தடைந்துள்ளது.

யாழ். பருத்தித்துறையில் இருந்து நேற்று வைபவ ரீதியாக ஆரம்பமான இந்த வாகனத் தொடரணி நேற்று மாலை கிளிநொச்சி நகரை சென்றடைந்தது.

இதேவேளை இந்த வாகனத் தொடரணியின் மூன்றாம் நாள் பயணம் நாளை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரை நோக்கி நகரவுள்ளது.

30 நாட்களில் 300 நகரங்கள் ஊடாக சுமார் இரண்டாயிரத்து 500 கிலோமீற்றர் தூரத்தை இந்த வாகனத் தொடரணி கடந்து செல்லவுள்ளது.

2 3 4 5