வவுனியாவில் பாடசாலை வகுப்பறை விசமிகளால் எரிக்கப்பட்டது..!

335

வவுனியா மூன்று முறிப்பு அ.த.க. பாடசாலையில் அமைந்திருந்த வகுப்பறையொன்று விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆரம்ப பிரிவு மாணவாகளின் உளநல மேம்பாட்டுக்காக பாடசாலை மாணவர்களின் பெற்றோரால் அமைக்கப்பட்டிருந்த இவ் வகுப்பறையே இனந்தெரியாதோரால் நேற்று இரவு எரியூட்டப்பட்டுள்ளது.

வவுனியாவின் தமிழ் மக்கள் வாழும் எல்லை கிராமத்தில் அமைந்துள்ள இப் பாடசாலையின் வகுப்பறை கொட்டகை எரியூட்டப்பட்டமை கல்விச்சமூகத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் எரியூட்டப்பட்ட வகுப்பறையை பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் வவுனியா பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1

2