வவுனியா – மதவாச்சி ஏ-9 வீதியில் 167வது கிலோ மீற்றர் நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்று அதிகாலை 2.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் கொள்கலன் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.