வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட பாடசாலைகளை ஒன்றிணைத்து பொலிசாரால் சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டு கௌரிவிக்கப்பட்டதுடன் அவர்களது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மடுகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கள்ளிக் குளம் பொலிஸ் அதிகாரி ஜீவா, கிராம அலுவலர் பெனடிற் மற்றும் கள்ளிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கட்பட்ட பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.