நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன.
வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற்றில் கலந்துகொண்டு 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன், வடமாகாண மட்டத்தில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையையும் அண்மையில் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.