கொமர்ஷல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியமானது (CSR நிதியம்) பெங்களூரில் உள்ள பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனமான Sambhram முகாமைத்துவ கற்கைகள் நிலையத்தில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசிலை வென்ற வவுனியா பகுதி மாணவர்கள் இருவருக்கு அனுசரணை வழங்கியுள்ளது.
வர்த்தக முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் கற்கவே இவர்கள் தெரிவாகி இருந்தனர். கொமர்ஷல் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க வங்கி ஊழியர்கள் கிளையால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
படத்தில் இரண்டு பட்டதாரிகளும் (இடமிருந்து இரண்டாவதும் மூன்றாவதும்) கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதியத்தின் அதிகாரிகளான (இடமிருந்து) பிரியந்தி பெரேரா- ஒருங்கிணைப்பாளர், கொமர்ஷல் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும், மற்றும் சமூகப் பொறுப்பு நிதியத்தின் நிதிப்பொறுப்பாளர் ரவி டயஸ், நிதியத்தின் தலைவரும் பணிப்பாளருமான லக் ஷ்மன் ஹுலுகல்ல, பணிப்பாளரும் நிதிப்பொறுப்பாளருமான பேராசிரியர் உதித்த லியனகே, வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதிப்பொறுப்பாளரான ஹஸ்ரத் முனசிங்க, வங்கியின் சமூகப் பொறுப்பு பிரிவு உறுப்பினர் விவேகானந்தன் பரிதீபன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இந்தியாவில் மூன்றாண்டு கால கற்கை நெறிக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்ட போது அவர்களுக்கான அனுசரணை வழங்குமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
பட்டதாரிகளான பி.எஸ்.கே. சேதரத்ன மற்றும் பி.எம்.ரி.எல். ஜயசேன ஆகியோர் தமது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு அண்மையில் நாடு திரும்பினர். இவர்களின் மேலதிக கற்கை தேவைகளுக்காக கொமர்ஷல் வங்கி சமூகப் பொறுப்பு நிதியம் அவர்களுக்கு மடிக் கணனிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது.