நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு வாகன பேரணி இன்று யாழிலும் திஸ்ஸமஹாராகமயிலும் ஆரம்பமாகவுள்ளது.
யாழிலிலிருந்து ஆரம்பமாகும் பேரணி சாவகச்சேரி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மிஹிந்தலை, கெக்கிராவ, பலபத்வல, அக்குரன, கேகாலை, நிட்டம்புவ போன்ற பிரதேசங்களுடாக சென்று இம்மாதம் 30ம் திகதி காலி முகத்திடலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை திஸ்ஸமஹாராமயிலிருந்து ஆரம்பமாகும் பேரணி ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, களுத்தறை, மத்துகம, பாணந்துறை, இங்கிரியாவ, ஹங்வெல்ல, பியகம, கடுவெல, மாலம்பே, ஹோமாகம, கொட்டாவ, பிலியந்தல, மொரட்டுவ, மஹரகம, பத்தரமுல்லை, நுகேகொடைபோன்ற பிரதேசங்களினூடாக சென்று காலி முகத்திடலை சென்றடைவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.