வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த வவுனியா மேல் நீதிமன்றம்!!

307

vavunia_high_courtவவுனியாவில் ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் குற்றவாளியாக காணப்பட்ட ரணவீரகே ஜானக ரணவீர என்பவருக்கே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆயுதமுனையில் செக்கடிப்புலவு செல்வாநகரை சேர்ந்த மருதமுத்து புண்ணியமூர்த்தி என்பவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்தமை சம்பந்தமாக நடைபெற்ற வழக்கினை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் இத் தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

இருப்பினும் குறித்த குற்றவாளி 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதனை கருத்தில் கொண்டு நீதிபதி குறித்த குற்றவாளிக்கு 6 வருடங்களும் 6 மாதங்களும் சிறைத்தண்டனையை அனுபவித்தல் போதுமானதென்றும் மேலும் தீர்ப்பளித்திருந்தார்.

இவ் வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் வழக்கை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.