அழுது புரண்டு கதறிய இளைஞர் : மிரட்டி நடத்தி வைக்கப்பட்ட திருமணம்!!

595

 
இந்தியாவில் இளைஞர் ஒருவர் கடத்தி வரப்பட்டு விருப்பத்துக்கு மாறாக அவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வினோத் யாதவ் என்ற இளைஞர் அங்குள்ள இரும்பு ஆலையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். வேறு இடத்துக்கு பணியிடை மாற்றம் வேண்டும் என வினோத் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு கும்பல் அவரிடம் வந்து தங்களுக்கு அமைச்சரை தெரியும் என கூறியுள்ளனர்.

அமைச்சரிடம் சென்று பணியிடை மாற்றம் குறித்து கோரிக்கை வைத்தால் உடனடியாக நடக்கும் என ஆசை வார்த்தை கூறி அவரை மொகமா நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஒரு இடத்தில் வினோத்தை அடைத்து வைத்த அவர்கள் அங்கிருந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதற்கு வினோத் மறுக்கவே தங்களிடம் இருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இதோடு சம்பவ இடத்தில் இருந்த பெண்களும் வினோத்துக்கு எதிராக செயல்பட்டு அவரை திருமணம் செய்ய வற்புறுத்தினார்கள்.

வினோத் கதறி அழுது கெஞ்சியும் அதை காதில் வாங்கி கொள்ளாத கும்பல் அவரை பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

சம்பவத்தை அங்கிருந்தவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலானது. இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பீகாரில் இது போன்ற கட்டாய திருமணங்கள் அதிகளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.