மொடல் காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

544

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மொடல் காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன், கொடூர ஆயுதத்தால் அவரது கழுத்தை இரண்டாக துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜோதி சிங் மும்பையில் செயல்பட்டுவரும் மதுபான விடுதிகளில் நடனக் கலைஞராகவும், மொடலாகும் இருந்து வருகிறார்.

ஜோதி சிங் பணிபுரிந்து வந்த நடன பார்களில் வாடிக்கையாளராக இருந்த பிரதேஷ் பட்டேல் ஏற்கனவே திருமணமான நிலையிலும் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறவே இருவரும் அடிக்கடி பட்டேலின் குடியிருப்பு ஒன்றில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திம்பா பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்புக்கு ஜோதி சிங் சென்றுள்ளார்.

அங்கிருந்து இருவரும் புத்தாண்டை மும்பையில் கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் திம்பா திரும்பியுள்ளனர்.

இதனிடையே 2 ஆம் திகதி தமது வாகன ஓட்டுனர் மற்றும் அவரது மனைவியுடன் ஜோதி சிங் பட்டேலின் குடியிருப்புக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்படவும், நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி திட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பட்டேல் அங்கிருந்த கொடூர ஆயுதத்தால் ஜோதியின் கழுத்தை வெட்டி இரண்டாக துண்டித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஜோதியின் வாகன ஓட்டுனரும் அவரது மனைவியும் உடனடியாக பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் தற்போது பட்டேலை கைது செய்துள்ளனர்.