தூக்கில் தொங்கிய காதல் ஜோடி : இளம் தம்பதியரின் விபரீத முடிவு!!

727

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 23), பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன் செல்வமும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(வயது 20) என்னும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செல்வம் பணிக்கு வராததால், அவர் பணிபுரிந்து வந்த பேக்கரியின் உரிமையாளர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி செல்வம் இறந்து கிடந்த நிலையில், அவரின் அருகில் அவரது காதல் மனைவியும் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் நடத்தியுள்ள விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக செல்வத்தின் மனைவி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்று வீடு திரும்பிய செல்வம் மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.