தனியாக வந்த 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்!!

548

தமிழகத்தில் பேருந்திற்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முந்தினம் மதியம் புதுக்கோட்டையின் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சக மனிதர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.

சில நிமிடங்கள் கழித்தும் அவரிடம் அந்த அசைவும் இல்லாததால் சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வந்து மூதாட்டி இறந்து போனதை உறுதிபடுத்திய பிறகு, கையில் வைத்திருந்த பையில் உள்ள செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி முத்துக்கருப்பன் கூறுகையில், பொன் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மை ஆச்சி(வயது80) என்பவர் வயது முதிர்வின் காரணமாக இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவருடன் செல்போன் இருந்ததால் உறவினர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க உதவியாக இருந்தது.

வயதானவர்களை வெளியே தனியாக அனுப்ப வேண்டாம், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது என கூறியுள்ளார்.