பெண் பொலிசாருக்கு செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!

428

arrestகடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் பொலிசாருக்கே செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தால், பெண் பொலிஸ் ஒருவரின் கம்ப்யூட்டரில் பதிவான குரல்தான் உங்களை வரவேற்கும். ‘‘வணக்கம். காவல் கட்டுப்பாட்டு அறை, தவறாக அழைத்திருந்தால் இணைப்பை துண்டிக்கவும். காவல் உதவி தேவையென்றால் எண் ஒன்றை அழுத்தவும்’’ என்ற பெண் பொலிசின் குரல் ஒலிக்கும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மீறி கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில மாதங்களாகவே செல்போனில் பேசி, லாரி கிளீனரான பன்னீர் செல்வம் பெண் பொலிசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் பெண்களின் அங்க அடையாளங்களை சொல்லி பன்னீர் செல்வம் அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.

நேற்று இரவும் 9 மணிக்கு வழக்கம் போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண்களிடம் பேசக்கூடாத வார்த்தைகளையெல்லாம் பெண் பொலிசிடம் அள்ளி வீசியிருக்கிறார். இப்படி எல்லை மீறி பெண் பொலிசுக்கு தொல்லை கொடுத்த அவர், உச்சக்கட்டமான ‘செக்ஸ்’ வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன பொலிசார், பன்னீர் செல்வத்தின் ‘‘கெட்ட வார்த்தை’’களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இது பற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன், எழும்பூர் பொலிசில் புகார் செய்தார். எழும்பூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் கடந்த 7 மாதங்களில் பன்னீர் செல்வம் 1041 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் பொலிசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் அவர் மீது பாய்ந்தது.

இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பன்னீர் செல்வம் சிறையில் அடைக்கப்படுகிறார்.

‘பன்னீர் செல்வத்தின் வாயில் இருந்து வெளியாகும் ‘‘துர்நாற்றமெடுக்கும்’’ வார்த்தைகளுக்கு சிறைக் கம்பிகள் கடிவாளம் போடுமா?