யாழ். வாகன விபத்தில் வவுனியா இளைஞர்கள் இருவர் பலி..!

366

accidentயாழ்ப்பாணம் பளை – கிளாலி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்சுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மணிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் விக்​னேஸ்வரன் (வயது 36) மற்றும் ராமச்சந்திரன் அபிலக்‌ஷன் (வயது 18) ஆகியோரே விபத்தில் பலியாகியுள்ளனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.