வவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதல்..!

365

vavuniyaவவுனியா வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியாகத்தர் மீது வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான எஸ் தேவராஜா என்பவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸில் இன்று (25.10) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பிரதேச செயலகத்தில் இருந்து மதிய உணவிற்காக வீடு சென்றுகொண்டிரு;த சமயம் நெடுங்கெணியில் உள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தில் பத்திரிகையை கொள்வனவு செய்துகொண்டிருந்த போது அரசியல் ரீதியாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே சமுர்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் கால்கள் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமத்தை எதிர்கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதே பிரஜைகள் குழுவின் தலைவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று மாலை தன் மீது இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பிரஜைகள் குழுவின் தலைவரும் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவருமான எஸ். தேவராஜாவினால் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் தமது சக உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதுடன் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.