வவுனியா பூந்தோட்டத்தில் இன்று நடைபெறவுள்ள முதியோர் தின விழா!!

350

muthiyorவவுனியா பூந்தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் முதியோர்தின விழா நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவிற்கு வைத்தியர் சு.பஞ்சலிங்கம் அவர்கள்(தலைவர் வர்த்தக சங்கம் பூந்தோட்டம்) தலைமை தாங்குகின்றார்.

பிரதம விருந்தினர்களாக திரு.திருமதி.தனபாலசிங்கம் தம்பதியினர் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), திரு.சி.கருணாகரன்(முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி வவுனியா)

மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.க.ஜோசப் விஜயரட்ணம் (கிராம உத்தியோகத்தர் 214A,வவுனியா) திரு.ஜோ.பெ.கிறிஸ்தோப்பர் (தலைவர் ஓய்வூதியோர், முதியோர் நலனுபாய சங்கம் வவுனியா) திரு.த.கெனடி(சிறுவர் உரிமைகள் மேன்பாட்டு உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

நடைபெறவுள்ள நிகழ்சிகளை திரு.S.நாகராசா தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் பூந்தோட்ட முதியோர் சங்க தலைவர் க.வேலாயுதபிள்ளை வரவேற்புரை வழங்கவுள்ளார்.

இவ் விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு முதியோர் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றார்கள்.

-பிரதீபன்-