வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் விபத்து : இரு இராணுவ வீரர்கள் பலி மூவர் படுகாயம்!!

396

ACCIDENT_logoவவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் ஏ-9 வீதியில் 219 கட்டை பகுதியில் இடம்பெற்ற கெப் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இராணுவ கெப் வண்டி வீதியில் திரிந்த மாடுகள் மீது மோதி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

நேற்று அதிகாலை 05.05 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் கெப் சாரதி உள்ளிட்ட 5 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியாவுக்கு மாற்றப்பட்ட போது மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

25 வயதுடைய ஆனந்த பண்டார (மாத்தளை) மற்றும் 24 வயதுடைய இந்துநில் தசநாயக்க (கல்கமுவ) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.