வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை நாளை காலை 5.30 மணிமுதல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் திருவீதிஉலா வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
-கலைத்தேவன்-