வவுனியாவில் சிறுமிகள் இருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா பொலிஸில் இவர்களின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நேற்று சனிக்கிழமை கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட 16 மற்றும் 17 வயதான சிறுமிகள் இருவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.