வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்ட சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் !!

318

imagesபொதுநல­வாய மாநாட்­டை­யொட்டி வருகை தந்­துள்ள சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிலர் நேற்று வடக்­கிற்கு விஜயம் செய்ய முற்­பட்ட வேளையில் வவு­னி­யாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சனல் 4 வைச்­சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் வருகை தந்­துள்­ளனர் என புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு தகவல் கிடைத்­த­தை­ய­டுத்தே இவர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் பின்னர் இவர்­களில் சனல் 4 வைச்­சேர்ந்­த­வர்கள் இல்லை என்­ப­தனை உறுதி செய்­ததன் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களை வடக்­கிற்கு செல்ல அனு­ம­தித்­துள்­ளனர்.

கார் ஒன்றில் வடக்கு நோக்கி முதலில் சென்ற சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களை வவு­னியா கல்­கு­ணா­மடு பகு­தியில் அமைந்­துள்ள பொலிஸ் காவ­லரண் பகு­தியில் தடுத்து நிறுத்­திய பொலிஸார் சுமார் அரை மணி நேரத்தின் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனு­ம­தித்­த­போ­திலும் ஓமந்தை சோத­னைச்­சா­வ­டி­யிலும் அவர்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து வேன் ஒன்றில் வடக்கு நோக்கி பய­ணித்த சில சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீண்டும் கல்­கு­ணா­மடு பொலிஸ் காவ­ல­ரணில் சுமார் 5 மணி­நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தொடர்பிலான விபரங்களை பெற்றதன் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.