வவுனியா தனியார் பஸ்கள் போராட்டம்!!

440

vavbusஅனுராதபுரத்தில் இருந்து வவுனியா மற்றும் கெபிதிகொல்லாவ வரையான பாதையில் பயணிக்கும் தனியார் பஸ்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தூர இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு, அனுராதபுரம் ஊடாக செல்ல வழங்கப்பட்ட பாதையை பயன்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று காலை இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தூர இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நகரின் ஊடாக செல்வதால் தமது பஸ்களில் பயணிகள் குறைவாக காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பாதையூடாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.