வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா இன்று (17.01) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் வாயிலில் அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அதிதிகள் மங்கள விளக்கேற்ற இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
பாடசாலை மாணவர்களின் கலாசார நடனம் மேலைத்தேய நடனம், குழுநடனம், மாணவிகளின் அபிநய நடனம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் முதலாம் தர மாணவர்களுக்கான பாட நூல்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்களாக செலான் வங்கி முகாமையாளர் கெ.அமுதன், பாடசாலை மேம்பாட்டு திட்ட வலயப் பிரதிநிதி என்.கே.கிறேனியம், ஆசிரிய ஆலோசகர் எம்.தேவசேனா, ஓய்வு நிலை அதிபர் ஜி.நடராஜா, பிரதி அதிபர், பகுதி தலைவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



















