வவுனியா கோவில்குளத்தில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

617

வவுனியா கோவில்குளத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (20.01) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கோவில்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் இன்றி பாடசாலை செல்லாது இருந்த மாணவர்கள் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ‘அம்பாள் மோட்டர்ஸ் உரிமையாளரும்’ சமூக சேவகருமான எஸ்.சதீஸ் குறித்த பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.