வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று(25.01) போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை வாயிலிருந்து ஆரம்பமாகிய மாணவர் பேரணி கண்டி வீதியூடாக பழைய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்றுவட்டம் சென்று ஹொறவப்பொத்தான வீதியூடாக பஜார் வீதி மணிக்கூட்டு கோபுரம் சென்று கண்டி வீதி வழியாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி இன்று வரையான காலப்பகுதி வரை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இன்றுடன் நிறைவுறுகின்றது.
இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலைமட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் போதைக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்.























