வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம்!!

802

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இறுதி நாளான இன்று நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

போதைவஸ்துக்கு எதிரான பதாதைகள் தாங்கியவாறு வீதிக்கு வந்த மாணவர்கள் போதைக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

‘போதைக்கு எதிராக பாடசாலையின் சக்தி’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கடந்த நான்கு நாட்களாக பாடசாலைகளில் நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளான இன்று போதைவஸ்தை தடுப்பது தெர்டர்பாக ஊடகங்கள் ஆற்றிய சேவைகள் குறித்தும் மாணவர்களின் கேள்விகளுக்கு ஊடகவியலாளர் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.