வவுனியா குருமன்காட்டில் திடீரென தீப்பற்றிய இறைச்சி விற்பனை நிலையம்!!

456

 

திடீரென தீ

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையம் இன்று (27.01.2019) மதியம் தீடிரென தீப்பற்றியெரிந்தது.

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னேழுக்கினால் தீடிரென தீப்பற்றியெரிந்தது.

அவ்விடத்தில் நின்ற பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு மண்ணைக் கொண்டு வீசி தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்களோ, சேதங்களோ ஏற்படவில்லை.