வவுனியா வடக்கு சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் திறனாய்வுப் போட்டி!!

1593

 

வவுனியா வடக்கு சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று (27.01) பாடசாலையின் அதிபர் திரு.விமலராசன் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், சிறப்பு விருந்தினராக நெடுங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.கிருபாகரன், நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார, உதவிக்கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில் குமரன், நெடுங்கேணியில் அமைந்துள்ள வங்கிகளின் முகாமையாளர்கள்,

கௌரவ விருந்தினர்களாக நெடுங்கேணி வர்த்தக நிலைய உரிமையாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களான சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள், பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் அணிநடை நிகழ்வு, ஒட்டப்போட்டி, வினோத உடை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.