வவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்!!

919

 

விழிப்புணர்வு ஊர்வலம்

வவுனியாவில் படைப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.ஷகீலா பாணுவின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வவுனியா அரசாங்க அதிபர் எச்.ஐ.ஹனீபா, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார்,

வவுனியாவில் மாவட்டத்தில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் விவசாய திணைக்கள உத்தியோத்தர்கள் விவசாயிகள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றிருந்தனர்.

3 கமநல சேவைகள் நிலையங்களில் இருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்து அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கம் வரை சென்றிருந்டன் விழிப்புணர்வு உரையை அடுத்து ஊர்வலம் முடிவடைந்தருந்தது.