வவுனியாவில் விபுல சாரணனின் சமூக செயற்றிட்டம் மாவட்ட ஆணையாளரினால் திறந்து வைக்கப்பட்டது!!

677

 

விபுல சாரணன் செல்வன் தர்மசீலன் லிசாந்தனின் ஜனாதிபதி விருது செயற்றிட்டமாக வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவர்களுக்கான பயணிகள் நிழல்குடை மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டு திறப்பு விழா விபுல சாரணர்களின் பொறுப்பாசிரியர் பி.தற்பரன் தலைமையில் நேற்று முன்தினம் (28.01.2019) மாலை நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சாரண மாவட்ட ஆணையாளர் ச.பத்மநாதன் கலந்து பயணிகளுக்கான நிழல் குடையினை திறந்து வைத்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக கல்லூரி அதிபர் பொ.சிவநாதன், பிரதி அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன், சாரண உதவி மாவட்ட ஆணையாளரும், வவுனியா நகர சபையின் உறுப்பினரும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான சுந்தரலிங்கம் காண்டீபன்,

மைதான நிதியத்தின் செயலாளர் ஸ்ரீதரன் கல்லூரியின் ஜனாதிபதி சாரணர்களான வி.சஜீவ்நாத், ஜெ.பிரதீபன், வ.பிரதீபன், யோ.சதுர்சிகன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் சாரணர்களும் கலந்து கொண்டனர்.