வவுனியாவில் பொலிசாரால் மூவர் அதிரடியாக கைது!!

844

மூவர் அதிரடியாக கைது

வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு பல்வேறுசம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று
பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்புபிரிவினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வெளிநாட்டு சிகெரட்களைஉடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரும், கஞ்சா, போதைப் பொருட்களை மில்லிகிராம் அளவில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் இருவருமாக மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்கள் நீதி மன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.