வவுனியாவில் தமிழ்க் கொலை : அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கு!!

1005

தமிழ்க் கொலை

வவுனியாவில் அண்மையில் கண்டி வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஒன்றில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா கண்டி வீதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குச் செல்லும் பிரதான வாசலிலும் நீதிமன்றத்திற்கு முன்பாகவும் தற்போது அண்மையில் பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப் பெயர்ப்பலகையிலேயே இவ்வாறு ஹொறவப்பொத்தான வீதி என்பதற்கு பதிலாக ஹொறவப்பொத்தாள வீதி என்று வீதிப்பலகையில் பதிவேற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் வசித்துவரும் தமிழ்மக்களினால் இவ்வாறு அரச கரும மொழிகள் அமைச்சரின் செயற்பாட்டில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சரின் இணைப்பாளர்கள், மாவட்ட செயலகத்திலுள்ள அரச கரும மொழிகள் பிரிவு என்பவர்களின் கண்களில் தெரியவில்லையா? என்ற கேள்வியையும் ஏழுப்பியுள்ளனர்.

தவறுகள் இடம்பெறுவது தவிர்க்கப்படவேண்டும். தமிழ் மொழியில் அரச உயர் அதிகாரிகள் பணியாற்றும் வவுனியா பகுதியில் இவ்வாறான ஒரு செயற்பாட்டில் தவறு ஏற்பட்டுள்ளது என்பது தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகவுள்ளதாகவும் பொதுமக்களிளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் அரச கரும மொழிகள் அமைச்சரின் கவனத்திற்கக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.