சிறைக்கைதிகள் விடுதலை
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து மூன்று சிறைக்கைதிகள் நேற்று (04.02.2019) காலை 10.30 விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.