வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு!!

330

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தெரிவு வைரவபுளியங்குளத்திலுள்ள மாவட்ட காரியாலயத்தில் நேற்று காலை 10 மணிக்கு தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் சபா.குகதாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாவட்ட இளைஞர் அணி செயலாளராக சு.சுகந்தனும் துணைச் செயலாளராக ச.அபிஷேக் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுக் கூட்டங்களில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் விஜயகுமாரன், பிரதி அமைப்பாளர் நாகராஜன், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.