வவுனியாவில் விசமிகளால் வெட்டப்பட்ட மரத்தால் போக்குவரத்துக்கு சிரமம்!!

332

 

விசமிகளால் வெட்டப்பட்ட மரம்

வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் பிரதான வீதியில் விசமிகளால் பாரிய முதிரை மரமொன்று வெட்டி வீழ்த்தப்பட்டதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பூவரசன்குளம் இலுப்பைக்குளம் வீதியில் வேலங்குளத்தை அடுத்த சிவா நகர்ப்பகுதியிலேயே நேற்று இரவு வீதியோரத்தில் நின்ற பொறுமதிவாய்ந்த முதிரை மரமொன்றினை விசமிகள் சிலர் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பிரதான பாதையினூடான போக்குவரத்து இன்று காலை பாதிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்கள் அரச அலுவலர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்றப்பட்டது.

இந் நிலையில் குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள விமானப்படடையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீதிக்கு குறுக்காக காணப்பட்ட மரத்தினை வெட்டி அகற்றி துப்பரவு செய்ததன் பயனாக நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரான நிலைக்கு திரும்பியிருந்தது.