வவுனியா A9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

429

A9 வீதியில் விபத்து

வவுனியா A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று நெல் வெட்டும் இயந்திரத்துடன் மோதி குடை சாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று (07.02) காலை யாழ் நோக்கி A9 வீதியூடாக தேங்காய்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் முன்னால் பயணித்த அறுவடை இயந்திரம் (சுனாமி மெசின்) ஒன்றினை திடீரென அவதானித்த கனரக வாகன சாரதி பதற்றத்தில் வாகனத்தை திடீரென நிறுத்த முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அறுவடை இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி குடை சாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் அறுவடை இயந்திரத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.