வவுனியாவில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை மரணம்!!

1396

ஒரு மாதக் குழந்தை மரணம்

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்பால் புரையேறியதில் ஒரு மாதக் குழந்தை ஒன்று மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் பாலினை ஊட்டியுள்ளார். இதன்போல் தாய்பால் புரையேறியுள்ளது.

உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை மரணமடைந்துள்ளது. ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு மரணித்துள்ளது.